ஆயிரமாயிரம் --
கனவுகளையும், ஆசைகளையும்
கரங்களில் திணித்தது
சன்னலில் தெரிந்த
உலகம் !
கனவுகளுக்குச் சிறகு கட்டி
காற்றில் பறக்க முயலச்
சொன்னது - கண்களில்
கரைந்த உலகம்....
கதவைத் திறந்தபின் தான்
புரிந்தது -- உழைப்பு முட்டை
பறவையாகும் வரை
நாளும் அடைகாப்பது அவசியமென்று...!!
-- கவிஞர் செல்லம் ரகு...